கல்லொடுதோன் றோங்கித்தனிச் செம்மொழிவே றாய்வெறுஞ்
சொல்லென நில்லாத்தீஞ் சுவையாய் நீ; உனை மெல்லயான்
உணர்தின்பம் கானச்செய் யுமென் கவிக்
கனவுக்கும் தாழுண்டோ தமிழே!
ஐம்புலனைத் துமூறியென் அறிவினைத் தேய்த்துப்பின்
பொய்மையாய் போனாய் நின் மனம்வேண்டி மும்மையும்
நினைவினாலுனை நாடி நினைந்தின்பம் காணுமெந்தன்
கனவுக்கும் தாழுண்டோ தமிழே?
