நித்தமுனையான் படித்துவென் நினைவுசோலைதனில்
புத்தம்புது சிந்தனையாப் புஷ்ப்பித்தேன் - புத்தகமே,
சொல்லக்குறையாச் சுரங்கமுன்பொருள்; நீயென்றும்
அள்ளக்குறையா ஆழிகாண்!
அறியாமை அறிவீனம் அகந்தை இருள் சூழ்ந்து
பழியாய்க் கிடந்தேன் ஒரு பாழ் சிறையில் - முறையாய் நான்
முனைந்து நிதம் நூல் படிக்க அகன்றதிருள்; ஒளி
எனைத்தொடத் திறந்தது கதவு!
